Excel குழுமத்தின் sugavaazhvu healthcare மற்றும் tirchirapalli bhel city ரோட்டரி சங்கம் இணைந்து மாபெரும் இலவச விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நேற்று வெள்ளிக்கிழமை மே 9ம் தேதி காலை 9 மணி முதல் அய்யம்பட்டி தூய மதலேன் மரியாள் தேவாலயத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் பொது மருத்துவம் பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை நுரைஈரல் பரிசோதனை பல் பரிசோதனை கண் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது.

இந்த முகாமை EXCEL குழுமம் தலைவர் Rtn AKS Er Muruganandam அவர்கள் தலைமை ஏற்று நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் & தலைவர் T.செல்வராஜ், மாநில துணைத்தலைவர் திருமதி E.ரூபாதேவி, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி V ரேகா ஆகியோர் முகாமில் பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் தேவையான உதவிகளையும், ஒத்துழைப்பையும் வாங்கினார்கள்.சர்ச்
father லெனின், வேர்ட் (word)டிரஸ்ட் அன்பழகன் மற்றும் ஊர் முக்கியஸ்தர் பலரும் கலந்து கொண்டனர்.
