“தேசிய நூலக வார விழா”

இம்மாதம் நவம்பர் 14 முதல் இன்று 20.11.2024 வரை 57ஆவது தேசிய நூலக வார விழா, திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டத்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன.
இன்று 20ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு வாசகர்களுக்கு “வாசிப்பு என்ன செய்யும்” என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெற்றது.
இதில் கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதையை 5 நிமிடங்களுக்குள் வாசித்தார்கள்.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் நிறைவு விழாவில் வழங்கப்படும்.
மாவட்ட நூலக அலுவலர்,
திருச்சிராப்பள்ளி.
94435 32633













