Email :107
விழுப்புரம் வெள்ளத்தில் குழந்தையை காப்பாற்றிய செய்தியாளருக்கு பாராட்டுக்கள்!
விழுப்புரத்தில் செய்தி சேகரிக்க சென்ற இடத்தில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த குடும்பத்திற்கு உதவியதுடன், அவர்களின் குழந்தையை, புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் காமராஜ் சிலரின் உதவியுடன் வாளியில் வைத்து காப்பாற்றியது செய்தியறிந்து நெகிழ்ந்து போனேன். செய்தியாளர்கள் எனப்படுபவர்கள் தனித்தவர்கள் அல்ல சமூகத்தின் அங்கம் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். செய்தியாளர் காமராஜுக்கு எனது பாராட்டுக்கள்!
அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்.













