திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவரும் பொருப்பாளருமான ஆர்.கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் இலவசமாக மனு எழுதி தரும் பணிகளை செய்து வருகின்றனர்.

2025 ஆம் புத்தாண்டு முதல் திங்கட்கிழமையான நேற்று 06/01/2025 திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மா. பிரதிப் குமார் இ. ஆ. ப மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கூடுதல் நடுவர் ர. ராஜலட்சுமி துணை ஆட்சியர் திரு. செல்வம் அவர்கள் உள்ளிட்டோரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் பெட்காட் திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திக் டேனியல் தாய் நேசம் அறக்கட்டளையின் தலைவர் ஹெப்சி சத்தியாராக்கினி சுதா சர்வேஷ் சாக்ஸிடு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சசி கோமதி தின சேவை அறக்கட்டளையின் நிர்வாகி பகவதி தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் நிர்வாகி கண்ணன் மாற்றம் அமைப்பின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நமது குழுவினர் செய்து வரும் பணியினை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.













