இன்று 07.12.2024 டாஸ் அறக்கட்டளை மூலம் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள மல்லர் கம்பம் திடலில் நெல்லி, சப்போட்டா, மாமரம் ஆகிய 3 மரக்கன்றுகள் நடப்பட்டது.
திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் உயர்திரு.கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார்.
பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மல்லர் கம்பம் பயிற்சியாளர் உயர்திரு. விசு மற்றும் மல்லர் கம்பம் வீரர்கள் மரங்களை பாதுகாப்பதாக உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியை டாஸ் அறக்கட்டளையின் உறுப்பினர் திரு. மகேந்திரன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

இந்த நிகழ்வில் மல்லர் கம்பம் மாணவர்களும் டாஸ் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.












