இன்று 19.06.2026 தேசிய புத்தக வாசிப்பு தினத்தை முன்னிட்டு முசிறி ஒன்றியம் பெரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 140 மாணவர்களுக்கு புத்தக வாசிப்பின் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆல் தி சில்ரன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு முருகையா அவர்கள் விழா ஏற்பாடு செய்திருந்தார்.

தலைமை ஆசிரியர் ரேவதி அவர்கள் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் (பணிஓய்வு) இரா. மும்தாஜ் பேகம்
வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

உதவி ஆசிரியர் செபஸ்தியார் அவர்கள் நன்றி கூற விழா சிறப்பாக முடிந்தது.













