தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் மற்றும் குழந்தைகள் நாள் ஆகிய இரு

நிகழ்வுகளையும் கொண்டாடும் விதமாக நேற்று 20.11.2024 மாலை திருச்சிராப்பள்ளி கே.கே. நகர் பகுதியில் மாணவர்களுக்கு கதை சொல்லும் பயிற்சி, நினைவாற்றல் பயிற்சி, மரபு சார்ந்த விளையாட்டுகள் ஆகியவற்றுடன் ஓரிகாமி பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் கார்த்திகா கவின் குமார், பொருளாளர் ஜுபைதா முனவர், மாற்றுமுறை கல்வியாளர் வித்யா, குழந்தைகள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












