
இன்று 08.01.2025 திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய 78ஆவது வாசகர் வட்டம் நிகழ்ச்சி (இன்னொரு விவேகானந்தர் இருந்தால்) கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இது வரும் ஜனவரி 12 விவேகானந்தர் பிறந்தநாள் – தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படும் சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.

இதில் Abyasham அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு.ராம்குமார் ரவீந்திரன் அவர்கள் “இன்னோர் விவேகானந்தர் இருந்தால்” எனும் தலைப்பில்,

மிக மிக சிறப்பான உரையை நிகழ்த்தினார். பயனுள்ள பல புதிய தகவல்களை தந்ததால் மாணவ மாணவியர் விவேகானந்தர் பற்றி நிறைய தெரிந்துகொள்ள தூண்டியது.


அவருக்கும் Abyasham அமைப்பின் திரு.பிரஷாந்த் அவர்களுக்கும் திரு.லஷ்மி நாராயணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கல்லூரி கலை புல முதன்மையர் நூலகத் துறை தலைவர் முனைவர்.ச.லெஷ்மி அவர்களுக்கும் திருவானைக்காவல் அரசு கிளை நூலகர் திருமதி.அனுஷ்யா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வி.வே.விஸ்வேஸ்வரன் வாசகர் வட்ட தலைவர் அரசு கிளை நூலகம் திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி.















