திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்டத்தில் 10 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் “Bench and Bar Meeting” ( நீதிபதிகள் வழக்கறிஞரின் கருத்துக்களை கேட்கும் நிகழ்ச்சி ) வருகின்ற திங்கட்கிழமை 25.11.2024 ஆம் தேதி மதியம் 1 மணி அளவில் புதிய கட்டிடம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை நேரில் வந்து கூறலாம் அல்லது தலைவர் முல்லை சுரேஷ் இடம் கூறினால் அவர் நமது தேவைகளை அங்கு நேரில் சென்று எடுத்துரைப்பார் கட்டாயம் வழக்கறிஞர் Uniform-இல் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பார் கவுன்சில் ID Card கையில் வைத்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.













கு.வீராசாமி
வணக்கம் தமிச்செம்மல் ஐயா வீ.கோவிந்தசாமி அவர்களின் கவிதை தரும் கருத்து ஆழமானது,அர்த்தம் நிறைந்தது. விழியோரம் கசியும் கண்ணீரைத் துடைக்கும் கனிவான கவிதை. பெற்றிடுவோம் பேரின்பம் தொடரட்டும் தொடருவோம் வாழ்த்துகள்.