• Home
  • தமிழ்நாடு
  • பெரம்பலூரில் சமூக நீதி படைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நூல்கள் அறிமுக கூட்டம் லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு

பெரம்பலூரில் சமூக நீதி படைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நூல்கள் அறிமுக கூட்டம் லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

Email :507

பெரம்பலூரில் சமூக நீதி படைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நூல்கள் அறிமுக கூட்டம் லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.


வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் ரத்தினம் நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.
சமூக நீதிப் படைப்பாளர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சலீம் சகியுல்லா கான் தீக்கதிர் வாசர் வட்டத்தின் சார்பில் மருத்துவர் கருணாகரன் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் காப்பியன் அகல் கலை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் வினோதினி எழுத்தாளர் எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


களு கங்கை முதல் காவிரி வரை எனும் நூலை சமூக நீதி படைப்பாளர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஹிர் பாட்சா திறனாய்வு செய்தார். வரலாற்று ஒளியில் பெரிய வடகரை எனும் நூலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அகவி திறனாய்வு செய்தார்.


நூலாசிரியர்கள் வழக்கறிஞர் தமிழகன், கலீலுர் ரஹ்மான் ஆகியோர் ஏற்புரை  நிகழ்த்தினார்.
பேராசிரியர் அம்மணி சமூக செயற்பாட்டாளர் ஸ்டிக்கர் சத்தியா எழுத்தாளர் கௌதமன் நீல்ராஜ், முனைவர் மாயகிருஷ்ணன், ஆசிரியர்கள் சரவணன், சபா. சிலம்பரசன், காசிராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக சமூக நீதி படைப்பாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வசந்த் அன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முனைவர்  சாஹிராபானு அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts