• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தினுடைய 75 ஆவது ஆண்டு விழா இன்று 26.11.2024 காலை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தினுடைய 75 ஆவது ஆண்டு விழா இன்று 26.11.2024 காலை கொண்டாடப்பட்டது.

Email :383

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தினுடைய 75 ஆவது ஆண்டு விழா இன்று 26.11.2024 காலை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரியினுடைய செயலர் தந்தை அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார்.
முதல்வர் முனைவர் ப.நடராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

இந்நிகழ்வில் மாணவர்கள் 75 ஆவது ஆண்டு அரசமைப்பு சட்டத்தின் உடைய ஆண்டு விழாவை போற்றும் விதத்தில் அண்மையில் தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில் அரசு கல்வி நிறுவனங்கள் அரசு அலுவலகங்களில் 75 ஆம் ஆண்டு அரசன் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை

உறுதிமொழி ஏற்று கொண்டாட அறிவுறுத்தியிருக்கிறார்கள், அதன் அடிப்படையில் இன்றைய தினம் எம் கல்லூரி மாணவர்கள் அரசமைப்பு சட்டத்தினுடைய முகப்புரையை உறுதி மொழியாக ஏற்றனர். இந்நிகழ்வில் இருபால் மாணவர்கள் ஆசிரிய பெருமக்கள் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை தமிழ்த் துறை உதவி பேராசிரியர் கி. சதீஷ்குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts