விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்து, ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டு, சமரசமற்ற போராளியாக, எளிய வாழ்விற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஆர்.நல்லகண்ணு இன்று அவர் 100 வயதில் அடியெடுத்து வைக்கிறார், அவர்களது நூற்றாண்டு பிறந்தநாளை மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.சி.நீலமேகம்,
மக்கள் சக்தி இயக்கம்,
தண்ணீர் அமைப்பு.














