“சுய கற்றல் மையங்களில் கதை சொல்லலின் முக்கியத்துவம் – ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , ரகுநாதபுரம், திருவள்ளூர் மாவட்டம்”
கல்வியில் சிறந்து விளங்கும் திருவள்ளூர் மாவட்டம்!
ஆக்கம்:
எஸ் .சிவக்குமார், முதல்வர் பணி நிறைவு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்
Mobile. 6383690730
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ரகுநாதபுரம், திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவி கதையை மிக அழகாக, முகபாவங்களுடன் அசாத்திய வழங்கியுள்ளார்கள்.
இது அவர்களின் நம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் தொடர்பு கொள்ளும் திறனை வெளிப்படுத்துகிறது.
சுய கற்றல் மையங்களில் கதை சொல்லுதல் முக்கியப் பங்கு வகிக்கிறது, ஏனெனில் இது குழந்தைகளின் கற்பனைத் திறனை மேம்படுத்தி, விமர்சன சிந்தனை மற்றும் மொழித் திறனை வளர்க்கிறது. இது குழந்தைகளின் தன்னம்பிக்கை கொண்டவர்களாக உருவாக்கி, அவர்களின் மனோபலத்தையும் சமூக விழிப்புணர்வு அதிகரிக்க உதவுகிறது.
மாணவியின் சிறந்த கதை சொல்லல் திறனுக்கு பாராட்டுக்கள்!
அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர் மற்றும் ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும் நன்றி!
இப்படிப் பட்ட செயல்பாடுகள்
சுய கற்றல் முறையை செழுமையாக்கி, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுகின்றன.
நன்றி.












