தேசிய பெண்கள் குழந்தைகள் தினம்:
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பெண் குழந்தைகளுக்கு மரக்கன்று, புத்தகம் வழங்கல்!
தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில்பெண்குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் அறிவை வளர்க்கும் புத்தகங்கள்வழங்கப்பட்டன. மக்கள் சக்தி இயக்க மாநிலப்பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமையில் பொன்மலையடிவாரம் பகுதியில்நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு,“பெண் குழந்தைகள் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பே நாட்டின் எதிர்காலம்”என வலியுறுத்தினர்.மரம் வளர்ப்பதும்,புத்தகம் வாசிப்பதும் குழந்தைகளின் வாழ்க்கையை செழுமைப்படுத்தும் என்று தெரிவித்தனர். பெண் குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் சமூக வளர்ச்சிக்காக தொடர்ந்து மக்கள் சக்தி இயக்கம் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது.














