இன்று 09.03.2026 திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய *வாசகர் வட்டம்* நிகழ்ச்சி சிறப்பான முறையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் திருச்சி மனவளக்கலை மன்ற உதவி பேராசிரியர் *திருமதி.AR.விசாலாக்ஷி* அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு *நம் சமுகத்தில் பெண்களின் எதிர்காலம்* எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மிக அழகான தெளிவான உரை. அவரது சிந்தனையும் வயதின் அனுபவமும் அவரது உரையில் தெரிந்தது. அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

எனது வரவேற்புரையுடன் துவங்கிய நிகழ்வுக்கு தலைமை வகித்த கல்லூரி நூலகத்துறை தலைவர் கலை புல முதன்மையர் *முனைவர்.ச.லெஷ்மி* அவர்களுக்கும் முன்னிலை வகித்த திருவானைக்காவல் அரசு கிளை நூலக நூலகர்(பொ) *திருமதி.அ.விஜயலெஷ்மி* அவர்களுக்கும் நன்றியுரையாற்றிய நூலகத் துறை உதவி பேராசிரியர் *முனைவர்.மஞ்சுளா குமார்* அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
*வி.வே.விஸ்வேஸ்வரன், திருஆனைக்கா*













