10ம் வகுப்பு மாணவர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம் வாழ்த்துகள்!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
அன்பு மாணவச் செல்வங்களே,
நம்புங்கள்! நம்மால் முடியும்!!
அச்சமின்றி, முழு நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் தேர்வை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் செய்த கடின உழைப்பு கண்டிப்பாக நல்ல பலனைத் தரும். சிறந்த மதிப்பெண்களைப் பெற்று, உங்கள் கனவுகளை நனவாக்கி, நம்புங்கள் வாழ்வில் உயர்ந்த வெற்றிகளைப் பெற நம்மால் முடியும் என வாழ்த்துகிறோம்.
மாணவச் செல்வங்களுக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கும் மக்கள் சக்தி இயக்கம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
மாணவர்கள் தங்கள் இலக்கை அடைந்து வாழ்க்கையில் சிறக்க மக்கள் சக்தி இயக்கம் மனமார்ந்த பிரார்த்தனைகளைத் தெரிவிக்கிறது.
கே.சி.நீலமேகம்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் சக்தி இயக்கம்.













