Email :141
மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் இன்று தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு 02.12.2024
காலை 10:30 மணி அளவில் எழில்நகர் பகுதியில் அமைந்துள்ளது 100 நாள் குளத்தின் கரையில் பனை விதைகள் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் நிறுவன தலைவர் திரு டி.செல்வராஜ் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி ஆ.பிரேமா, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி வா.ரேகா மற்றும் திருமதி உமா, திருமதி கவிக்குயில், திருமதி லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.












