டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இன்று காலை 8 மணி (நவ.18) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிலை 1, 2, 3 கட்டுப்பாடுகளுடன் நிலை 4 இன்று முதல் அமலாகிறது. டெல்லியில் குளிர் காலம் தொடங்கும் நிலையில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை காற்றின் தரம் ‘severe plus’ நிலைக்கு மோசமடைந்ததால், திங்கள்கிழமை காலை 8 மணி முதல் டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) மாசு எதிர்ப்பு கட்டுப்பாடுகளின் மிக உயர்ந்த தொகுப்பான GRAP-4 ஐ காற்று தர மேலாண்மை ஆணையம் விதித்தது.

எட்டு-புள்ளி GRAP 4 கட்டுப்பாட்டினனன் கீழ், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர, டெல்லியில் பதிவுசெய்யப்பட்ட (BS-IV அல்லது அதற்கும் குறைவான) டீசல் இயங்கும் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அல்லது அவசர சேவைகளை வழங்கும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
சில விதிவிலக்குகளுடன் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் உள்ளிட்ட கட்டுமான மற்றும் இடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில்வே, மெட்ரோ ரயில் சேவைகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய பணிகள் அனுமதிக்கப்படுகின்றன.
GRAP-4 தடைகள் அதன் முந்தைய நிலைகளின் கீழ் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுக்கு கூடுதலாக இருக்கும், ஏனெனில் பிராந்தியம் தொடர்ந்து புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. GRAP-III இன் கீழ் அதிக தூசியை உருவாக்கும் கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, தேசிய தலைநகரம் நாட்டின் இரண்டாவது மாசுபட்ட நகரமாக இருந்தது, அன்றைய சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) 441 ஆக இருந்தது, இது மாலை 7 மணிக்குள் 457 ஆக உயர்ந்தது.













