பார்வையற்ற இல்ல பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் இன்று நடத்தப்பட்டன.

இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி, திருவரம்பூர் தாலுகா கிளை சார்பில் பார்வையற்ற இல்ல பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்
இன்று 22.11.2024 காலை திருச்சி மன்னார்புரத்தில் உள்ள விழியிழந்த மகளிர் மறுவாழ்வு இல்லத்தில் நடத்தப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் சேர்மன், இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி, திருவரம்பூர் தாலுகா கிளை, மற்றும் கௌரவ கிரிஃப் கவுன்சிலர், கண் தான ஊக்குவிப்பாளர்,

திருச்சிராப்பள்ளி, தலைவர் K. செல்வராஜ் அவர்கள் விழா ஏற்பாடு மற்றும் தலைமை தாங்கினார்.


இவ்விழாவில் இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி, திருவரம்பூர் தாலுகா கிளை, நிர்வாகிகள், உறுப்பினர்கள் விழியிழந்த மகளிர் மறுவாழ்வு இல்லத்தின் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கி மகிழ்ந்தனர்.














