உலகப்புகழ் பெற்ற திருச்சிராப்பள்ளி அருள்மிகு சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா 14/04/2025 செவ்வாய்க் கிழமையான இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது. திருக்கோவில் நிர்வாகத்தின் அழைப்பிதலை ஏற்று

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வர் முனைவர் ம. பிச்சைமணி அவர்களின் வழிக்காட்டுதலின் படி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ஆ.அருண் பிரகாஷ், அவர்கள் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வல மாணவ மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் (13 மற்றும் 14/04/2026) கடந்த இரண்டு நாட்களாக

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்த அனைத்துதரப்பு பக்தர்களுக்கு குடிநீர் வழங்குதல், கூட்ட நெரிசலை சீர்படுத்துதல், குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்குதல், மற்றும் அன்னதானம் வழங்குதல் போன்ற தன்னார்வல சேவைகள் செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.












