
பாராட்டுக்கள் & வாழ்த்துகள் – செல்வி ஞா. லக்ஷனாவிற்கு!
by
S.சிவக்குமார்,
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
காஞ்சிபுரம் மாவட்டம்.
உப்பிலியபுரம் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, த. பாதர்பேட்டை பேட்டையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி செல்வி ஞா. லக்ஷனா, பண்டைய தமிழ் எழுத்துகளான பிராமி எழுத்துகளை பயன்படுத்தி 10 திருக்குறளை வடிவமைத்துள்ளார் என்பது பெருமைக்குரிய நிகழ்வு.
தமிழ் மொழியின் வரலாற்றுப் பண்பாட்டில் சிறப்பு வாய்ந்த பிராமி எழுத்துகளை மீண்டும் எழுப்பி, அதை தன் படைப்பாற்றலுடன் ஒருங்கிணைத்துள்ளார். இது அவருடைய கல்விச் சுவாரஸ்யத்தையும், மொழி மீதான ஆழ்ந்த பற்றையும் வெளிப்படுத்துகிறது.

இத்தகைய ஆர்வம் கொண்ட மாணவர்கள் தமிழின் சிறப்பு, அதன் பழமை, மொழி வளர்ச்சி போன்றவை குறித்து மேலும் ஆராய்ந்து, புதுமையான விஷயங்களை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருப்பார்கள்.
செல்வி லக்ஷனாவிற்கு மனமார்ந்த பாராட்டுகள்!
அவருடைய திறமையும், ஆர்வமும் தொடர்ந்து வளர்ந்து, எதிர்காலத்தில் தமிழ் மொழிக்காக மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்!
பட்டதாரி ஆசிரியர் M.தனலட்சுமி வழிகாட்டி ஆசிரியராக செயல்படுகிறார்.












