திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், மேலசீனிவாசநல்லூர் ஊராட்சி அலுவலகத்தில் – 26/01/2026 திங்கட்கிழமையான இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தொட்டியம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சட்ட துணை தன்னர்வலர் முனைவர் ஆ.அருண்பிரகாஷ் இணை பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி அவர்கள் கலந்துகொண்டு

பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தனர் மேலும் முனைவர் அருண்பிரகாஷ் அவர்கள் பேசுகையில் இலவச சட்ட ஆலோசனை மையத்தின் செயல்பாடு மற்றும் 24 மணி நேரம் சேவை பொதுமக்கள் நலன் கருதி 24X7 மணி நேரம் இலவச அழைப்பு எண் 15100 செயல்பாடு போன்ற முக்கிய அம்சங்களை ஊர் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் விரிவாகவும் எடுத்துக்கூறினார்.














