ஓய்வு பெற்றவருக்கு பாராட்டு கடிதம்
31.01.2025.
To
A.P. சிவகுமார் அவர்கள்
மாவட்ட நூலக அதிகாரி
திருச்சிராப்பள்ளி
“சிறப்பான சேவைக்கு மனமார்ந்த பாராட்டு”
மிகுந்த மரியாதையுடன்,
உங்கள் ஓய்வுபெறும் இந்த சிறப்பான தருணத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலக அலுவலராக நீங்கள் அளித்த முக்கியமான சேவைகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் தலைமைப் பொறுப்பில், மாவட்ட நூலகம் அனைத்து வயது மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு கல்வி மையமாக மலர்ந்துள்ளது. நூலகத்தின் கட்டமைப்பு மேம்படுத்தல், சுகாதார மேலாண்மை, வருகையாளர்களுக்கு உகந்த சூழல் உருவாக்கம் ஆகியவற்றில் நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பொதுமக்களுக்கு பெரும் நன்மையை ஏற்படுத்தியுள்ளது.
பணியாளர்கள் குறைவாக இருந்தாலும், நூலக சேவைகளை விரிவுபடுத்துவதில் நீங்கள் காட்டிய முயற்சிகள் பாராட்டுதற்குரியது.

மாணவர்கள், அறிஞர்கள், மற்றும் அறிவை நாடுபவர்கள் பயன் பெறும் வகையில் நீங்கள் மேற்கொண்ட கல்வி சார்ந்த செயல்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
தொடர்ந்து அதிகரித்துப் நூலக பயனாளர்களின் எண்ணிக்கையே உங்கள் திறமையான தலைமைப் பொறுப்பை உணர்த்துகிறது.
புத்தகப் பற்றும், தொடர்ச்சியான கல்விக்கும் நீங்கள் ஊன்றிய பரப்புரை வியப்பூட்டுகின்றது.

நீங்கள் ஓய்வுபெற்று புதிய வாழ்க்கைப் பாதையில் செல்லும் இந்த தருணத்தில், உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து, இனிய ஓய்வு வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்.
உங்கள் சேவை என்றும் நினைவில் நிலைத்து, எதிர்கால தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்கும்.
மிக்க நன்றிகள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்,
எஸ். சிவகுமார்,
முன்னாள் முதல்வர்,
DIET, காஞ்சிபுரம்.














