பாரதிதாசன் பல்கலைக்கழகம் காஜாமலை வளாகம் மற்றும் Coroat Trust திருச்சியுடன் இணைந்து இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை இரண்டாம் ஆண்டு மாணவன் அபிநந்தன் அவர்களால் நடத்தப்பட்ட தூய்மையான நீர், சரியான சுகாதார வசதிகள், நல்ல தனிப்பட்ட தூய்மை (WASH) பற்றி விழிப்புணர்வு நிகழ்சி இன்று 08/11/2025 சனிக்கிழமை மாலை 04:30 மணிக்கு கல்மந்தை சமுதாயக்கூடம் காந்தி மார்க்கெட்டில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாச்சி கல்லூரியின் சமூகப்பணி துறை தலைவர் முனைவர் ஆ அருண்பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தேவையான விழிப்புணர்வு கருத்துக்களை விளக்கி கூறினார்
இதில் சுற்று பகுதியில் இருந்து சுமார் 54 மாணவ மாணவிகள் பங்கு கொண்டு பயன் பெற்றனர்.














