குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில் 24/08/2026 திங்கட்கிழமை அன்று திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு திரு. M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் மாவட்ட சட்டப்பணி ஆனைக்குழு செயலாளர் நீதிபதி திரு
A. பிரபு அவர்களின் அழைப்பிதழில் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம்,

குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் நிர்வாகிகள் ஏற்பாட்டில் வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் குறை கேட்கும் கூட்டம் மற்றும் 12/9/2026 அன்று நடக்கவிருக்கும் lok adalat சிறப்பாக நடத்துவது குறித்தும் புதிய நீதிமன்ற வளாகம், நான்காவது மாடியில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஆகையால் கூட்டத்தை சிறப்பித்து தருமாறு மரியாதைக்குரிய மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நீதிமன்ற நிர்வாகத்தில் ஏதாவது குறை இருந்தால் கூறியும்,lok adalat சிறப்பாக நடத்துவது குறித்தும் கருத்து தெரிவிக்குமாறு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.












