
திருச்சி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய குடியிருப்பு நல சங்க மக்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஜீவியன் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ பொது முகாம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய குடியிருப்பு நல சங்க மக்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஜீவியன் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ பொது முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குறிப்பாக தூய்மைபணியாளர்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கப்பட்டது இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் அளவு மற்றும் இசிஜிஎடுக்கப்பட்டது.

மற்றும் மருத்துவரின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் படி அவர்களுக்கு இலவச மருந்துகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஒருங்கிணைப்பு செய்தது சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு ராபின்சன் இந்நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த குடியிருப்பு நல சங்க தலைவர் திரு மூர்த்தி அவர்களுக்கும் மற்றும் அப்பகுதி வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி பிரியா அவர்களும்என் தலைமையில் இந்நிகழ்ச்சியானது தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஜீவியன் மருத்துவமனை மருத்துவர் திரு மதி.சினேகா திரு.மனோஜ் அவர்கள் பொது மருத்துவர் கலந்து கொண்டனர். இம் முகாமின் ஒருங்கிணைப்பாளர் திரு செல்வராஜ் அவர்களும் திரு முருகேஷ் அவர்களும் இந்த மருத்துவ முகாமை சிறப்புடன் நடத்திட வழித் துணையாக இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 115 நபர்கள் கலந்து கொண்டனர்.

அதில் குறிப்பாக 25 தூய்மைபணியாளர்கள் கலந்து கொண்டு இம் முகாமை சிறப்புற செய்ய வழி துணையாக இருந்தார்கள் அவர்களுக்கு குடியிருப்பு நல சங்கம் திரு.மூர்த்தி தலைவர் சார்பாகவும் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாகவும் நன்றி கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தது திரு .ராபின்சன்.














