
வேர்டு டிரஸ்ட் மற்றும் மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் (YRC) இணைந்து HIV/AIDS பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி துவாக்குடி அரசினர் கலைக்கல்லூரி இன்று 29/01/2025 காலை நடைப்பெற்றது.
கல்லூரியின் பேராசிரியர் முனைவர் திரு த.கருப்பண்ணன் அவர்கள் வரவேற்பு நிகழ்த்தினார்.கல்லூரியின் பேராசிரியர் திருமதி லீமா ரோஸ் (வரலாற்றுத்துறை தலைவர்) அவர்கள் தலைமை தாங்கினார்.இதில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை திருமதி A.கவிதாதேவி (ICTC ஆலோசகர்) அரசு மருத்துவமனை துவாக்குடி வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் வேர்ட் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் திரு N அன்பழகன் மற்றும் மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் நிறுவன தலைவர் திரு T.செல்வராஜ் மற்றும் துணைத்தலைவர் திருமதி E.ரூபாதேவி, மாநில ஆலோசகர் திரு E.தயாளன், மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி M.சத்யா, மாநில மகளிர் அணி துணை செயலாளர் திருமதி காயத்திரி, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி V.ரேகா, திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி S.கவிக்குயில், திரு E.அருண், திருமதி R.கடலரசி, திருமதி M.செண்பகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்லூரி பேராசிரியர் திரு ரா.லட்சுமி நாராயணன் (YRC ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர் முனைவர் திரு நெப்போலியன், பேராசிரியர் முனைவர் திருமதி ஜிகே மணி,பேராசிரியர் முனைவர் திருமதி சுப்புலட்சுமி, பேராசிரியர் திருமதி பத்மாவதி, பேராசிரியர் திருமதி மாலதி, பேராசிரியர் செல்வி மும்தாஜ், பேராசிரியர் முனைவர் திருமதி சாந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவில் பேராசிரியர் முனைவர் திருமதி மு.ஷர்மிளா அவர்கள் நன்றி கூறினார்.















