திருச்சி பொன்மலை பகுதியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 144-வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையேற்று, பாரதியார் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிறந்தநாள் விழாவில் இயக்க பண்பாளர்கள் செந்தில்குமார், நடராஜ், சகாயம், ராஜேஷ், பாபு கலந்துக் கொண்டு பாரதியார் முன்வைத்த தேசிய உணர்வு, தமிழ்மொழிப் பெருமை, சமத்துவக் கொள்கைகள் குறித்தும் நினைவுகூர்ந்து, சமூகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என உறுதியெடுத்தனர்.














