• Home
  • தமிழ்நாடு
  • பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அரசு கலைக் கல்லூரி, திருச்சி – 22 ஆகியவை இணைந்து செயல்படுத்தும் நாட்டு நலப் பணித்திட்டத்தின் (NSS) ஏழு நாள் சிறப்பு முகாம் 28.02.2026 சனிக்கிழமை அன்று நான்காவது நாளை எட்டியது.
தமிழ்நாடு

பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அரசு கலைக் கல்லூரி, திருச்சி – 22 ஆகியவை இணைந்து செயல்படுத்தும் நாட்டு நலப் பணித்திட்டத்தின் (NSS) ஏழு நாள் சிறப்பு முகாம் 28.02.2026 சனிக்கிழமை அன்று நான்காவது நாளை எட்டியது.

Email :11

பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அரசு கலைக் கல்லூரி, திருச்சி – 22 ஆகியவை இணைந்து செயல்படுத்தும் நாட்டு நலப் பணித்திட்டத்தின் (NSS) ஏழு நாள் சிறப்பு முகாம் 28.02.2026 சனிக்கிழமை அன்று நான்காவது நாளை எட்டியது. இந்நாளில் சமூக நலன், விழிப்புணர்வு மற்றும் பொதுசேவை ஆகியவற்றை மையமாகக் கொண்டு மூன்று முக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
முதலாவது நிகழ்வாக, திருவெறும்பூர் வட்டம் கூத்தைப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள கணேஷ் கார்டன் வளாகத்திலுள்ள “இறைவி மஹால்” கூடத்தில் ஆதார் சிறப்பு திருத்த முகாம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. இம்முகாமினை மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் & தலைவர் திரு.T செல்வராஜ் அவர்கள், அதன் ஆலோசகர் திரு.A அரவிந்த் அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் திரு. யுவராஜ் அவர்கள் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். அவர்கள் முகாமின் நோக்கத்தையும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் அவசியத்தையும் எடுத்துரைத்து முகாமை சிறப்புற துவக்கினர்.

முகாமில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி திருத்தம், கைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட ஆதார்த் தகவல் பிழைத்திருத்த சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. கிராம மக்களும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது ஆதார் விவரங்களைச் சரிபார்த்து தேவையான திருத்தங்களை மேற்கொண்டனர். மாணவர்கள் தன்னார்வத்துடன் ஒழுங்கமைப்பு பணிகளில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு வழிகாட்டி சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தினர். இம்முயற்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, முகாமின் சமூகப் பயனை மேலும் வலுப்படுத்தியது.
இரண்டாவது நிகழ்வாக, மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பு தலைவர் திரு.T செல்வராஜ் அவர்கள் “ஊக்கம் தரும் பொது உழைப்பு” என்ற தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரை நிகழ்த்தினார். சமூக மாற்றத்திற்கான விதைகளை விதைப்பதில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை வலியுறுத்திய அவர், ஒற்றுமை, பொறுப்புணர்வு, தன்னார்வச் சேவை ஆகியவற்றின் அவசியத்தை விளக்கமாக எடுத்துரைத்தார். தனிநபர் விழிப்புணர்வே சமூக முன்னேற்றத்திற்கான அடிப்படையாக அமைகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மூன்றாவது நிகழ்வாக, மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் ஆலோசகர் திரு.A அரவிந்த் அவர்கள் மாணவர்களிடம் உரையாற்றினார். “வீட்டு முன்னேற்றமும் சமூக முன்னேற்றமுமே நாட்டு முன்னேற்றத்திற்கு அடித்தளம்” எனக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கம், கட்டுப்பாடு, உழைப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் முன்னேறினால், அதன் பலன் சமூகத்திற்கும் நாட்டிற்கும் கிடைக்கும் என வலியுறுத்தினார். சுய முன்னேற்றமே சமூக வளர்ச்சியின் முதன்மை ஆதாரம் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இவ்வாறு சமூக சேவை, விழிப்புணர்வு உரை மற்றும் பொதுநலப் பணிகள் ஆகிய மூன்று நிகழ்வுகளும் ஒருங்கிணைந்த முறையில் சிறப்பாக நடைபெற்றதன் மூலம் முகாமின் நான்காவது நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன. மாணவர்களின் செயற்பாட்டு பங்கேற்பும், பொதுமக்களின் உற்சாகமான ஆதரவும் இம்முகாமின் சிறப்பை உயர்த்தியுள்ளன. சமூகப் பொறுப்புணர்வை வளர்த்தெடுக்கும் இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் சிறந்த தளமாக அமைகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts