கண்தானம் செய்தவரின் வாரிசுயிற்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டுகள்!
பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற எஸ்.நமசிவாயம் தந்தையும், மக்கள் சக்தி இயக்க நிர்வாகி திருமதி தரணி தாத்தாவுமான, ரயில்வே பணிமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் டி.சுவாமிநாதன்(92) அவர்கள் 14.02.2025 காலமானார்.
உயிர் உடன் இருக்கும் போது இரத்ததானம், இறந்த பிறகு கண்தானம் என்ற சொல்லுக்கு ஏற்ப, கண் தானம் செய்த டி.சுவாமிநாதன் தியாகத்துக்கு மிக்க நன்றி!
நற்பணியை செய்த வாரிசுகளுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மனதார பாராட்டுகிறோம்.
கே.சி.நீலமேகம்,
மாநில பொருளாளர்,
மக்கள் சக்தி இயக்கம், திருச்சி.












