
அருவி முதியோர் இல்லத்தில் பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சி கே.கே. நகரில் உள்ள அருவி முதியோர் இல்லத்தில் இன்று 14.01.2025 பொங்கல் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. Trichy Fast News நிறுவனர், L.பாபு அவர்கள் கலந்துகொண்டு இந்நிகழ்வில் முதியோர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் இணைந்து பங்கேற்றனர்.


பாரம்பரியமாகக் கோலங்கள் இடப்பட்டு, சிறப்பு உணவுகள் தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டன.
முதியோர்கள் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடி, இப்பொங்கல் அவர்களுக்கான சிறந்த அனுபவமாக அமைந்தது. “இது போன்ற பண்டிகைகள் நம்மை உற்சாகத்துடன் வாழ வைக்கிறது,” என முதியோர்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்வானது சமூகத்தில் பொங்கல் விழாவின் மகத்துவத்தையும் அருவி முதியோர் இல்லத்தின் சமூக பங்களிப்பையும் விளக்குகிறது.

















