• Home
  • தமிழ்நாடு
  • இன்று திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய “வாசகர் வட்டம்” நிகழ்ச்சி சிறப்பான முறையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு

இன்று திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய “வாசகர் வட்டம்” நிகழ்ச்சி சிறப்பான முறையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Email :43

இன்று 09.12.2025 திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய “வாசகர் வட்டம்” நிகழ்ச்சி சிறப்பான முறையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்ச் செம்மல் “திரு.ராச.இளங்கோவன்” (தலைவர்: ராசவேலர் சென்பகத்தமிழரங்கு, திருவரங்கம் ) அவர்கள் கலந்துகொண்டு ஜெயிக்க பழகு எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். சுமார் 45 நிமிடங்கள் சிறப்பானதொரு உரை.

மாணவ மாணவியரை முழு ஈடுபாட்டுடன் கவனிக்க வைத்த லாவகம் / தமிழ் உச்சரிப்பு/ குறிப்புகள் ஏதும் இன்றி கோர்வையாக பேசியது என அனைத்திலும் சிறப்பு. ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சி எனது வரவேற்புரையுடன் துவங்கியது. நிகழ்ச்சிக்கு
தலைமை வகித்த முனைவர் மாது அவர்களுக்கும் நன்றியுரையாற்றிய முனைவர் மஞ்சுளா குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts