Email :119
12.10.2025 இன்று நல்லோர் வட்ட மாநில பொறுப்பாளர்களுடன் திருச்சி மாவட்ட நூலகத் துறை பொறுப்பாளர் இரா. மும்தாஜ் பேகம் அவர்களும் கலந்து கொண்டு முன்மாதிரி நூலகமான தென்றல் நகர் கிளை நூலகத்தை பார்வையிட்டனர். திருமதி மும்தாஜ் பேகம் அவர்கள் எழுதிய நூலகத்தைப் பற்றிய சுலோகங்கள் அச்சடிக்கப்பட்ட பேனர் வழங்கப்பட்டது.

திருமதி ஷகிலா பேகம் நூலகர் அவர்கள், நூலகத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றி விரிவாக கூறினார்கள். இந்த நூலகம் போல் தமிழகம் முழுவதும் மற்ற நூலகங்களும் செயல்பட நல்லோர் வட்ட பொறுப்பாளர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
