உடல் உறுப்புகளை கொடையாக வழங்கியவர்களின் 51வது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதலும் பாராட்டுகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது, திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் .
கடந்த 6 ஆண்டுகளாக உடல் உறுப்பு கொடை மற்றும் உடற்கொடை வழங்கியவர்களை இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல்,நன்றி,பாராட்டுகள் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தெரிவித்து பாராட்டுச் சான்றிதழ், பயனாடை, திருக்குறள், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நூல்கள் மற்றும் பொருளாதார உதவியும் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் 51ஆவது நபராக திரும்பம் அருகில் உள்ள கோணாப்பட்டு விசுவநாதன் செட்டித் தெரு வாழ்ந்த செல்லி முருகேசுவரி அவர்கள் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தினால் அவரது ‘ உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய அப்பத்தா பழனியாயி அவர்களையும், குடும்பத்தினர்களை நேரில் சென்று சந்தித்து,ஆறுதலையும், நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துடன்,
*பயனாடை*
*பாராட்டுச் சான்றிதழ்*, , *திருக்குறள்*,
*டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதிய *சொந்த காலில் நில்,* நூல்கள் வழங்கி,”நெகிழியை
(பிளாஸ்டிக்) தவிர்ப்போம்,

துணிப்பை எடுப்போம்” என துணிப்பையை பயன்படுத்துங்கள் என *துணிப்பையும்* வழங்கி நன்றி கூறி. சிறப்பு செய்தனர்.
இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் திரு கே.சி. நீலமேகம், மாநில துணைச்செயலாளர்கள் திரு வெ.இரா.சந்திரசேகர்,திரு இரா.இளங்கோ, மற்றும் இயக்க பண்பாளர்கள்
கலந்து கொண்டார்கள்.














