Email :35
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும் பெரம்பலூர் புத்தகத் திருவிழா தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

03.03.2026 அன்று மாலை பெரம்பலூர் புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கில் விஜய் டிவி புகழ் மதுரை முத்துவின் பட்டிமன்றம் நடைபெற்றது. வாழ்வின் பொற்காலம் பழைய தலைமுறையா? புதிய தலைமுறையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கவிஞர் சுரேஷ் ஆறுமுகம் எழுதிய ” பின்தொடர்ந்து வந்த குயிலின் ஓசை ” என்ற ஹைக்கூ நூலை மதுரை முத்து அறிமுகப்படுத்தினார்.














