திருச்சி தெப்பக்குளம், பிஷப் ஹுபர் மேல்நிலைப்பள்ளியின், வால்ஸ் விடுதியில் கிறிஸ்மஸ் விழா நேற்று 03.12.2024 சிறப்பாக கொண்டாடப்பட்டது.



திருச்சி, தஞ்சை திருமண்டலத்தின் குருத்துவு செயலரும், பிஷப் ஹுபர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளருமான அருள்திரு முனைவர் வே. ராஜா மான்சிங், தலைமை தாங்கினார். பிஷப் ஹுபர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சைமன் சுகுமார், அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் அருள் திரு. பெனடிக் இம்மானுவேல் அவர்கள் கிறிஸ்மஸ் சிறப்பு செய்தி வழங்கினார்.

இவ்விழாவில் திருச்சி, தஞ்சை திருமண்டலத்தின் இறைமக்கள் செயலர், திரு. ஞானசசிகரன் மற்றும் பள்ளியின் இறை நெறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இருபால் ஆசிரியர் பெருமக்கள், அலுவலக ஊழியர்கள், இதர பணியாளர்கள் மற்றும் விடுதி மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.












