
திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம், நவம்பர் 2024 மாத கூட்டம், இன்று 21.11.2024 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்து, அரங்க வாழ்த்துப் பாட்டுடன் தொடங்கியது. கவிஞர் முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்ச்செம்மல் வீ. கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
தூய வளனார் மேல்நிலைப்பள்ளி, திருச்சி, 11ஆம் வகுப்பு மாணவன் செல்வன் அப்துல் ஹக்கீம் மாணவர் உரையாடினார்.

இக்கூட்டத்தில் உரையாடிய மாணவனுக்கு மரியாதை செய்யப்பட்டது. “காவியத்தாயின் புதல்வர்கள்” என்ற தலைப்பில் முனைவர் ச. மோகனரங்கன் சிறப்புரை ஆற்றினார்.


கவிஞர் வீ கோவிந்தசாமி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் இரா ஜெயலக்ஷ்மி ஆகியோர் பாராட்டினர். திரு சத்திய நாராயணன் நன்றி உரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் திரு பாலமுருகன் திரு கேசவன் திரு சதாசிவம் திரு அருணாசலம் திரு சத்திய நாராயணகுமார் திரு மாரிமுத்து
திருசம்பத் திரு நடராஜன் மருத்துவர் லட்சுமி நந்தகுமார் திரு பாலகுமார் திரு அலெக்ஸ் திரு கோவிந்தராஜ் திரு வல்லவராயன் திரு கண்ணன் திரு பழனிவேல்

திரு பாலசுப்பிரமணியன் திரு சக்திவேல் திரு மூர்த்தி திரு பால்ராஜ் பிரபு சிவ தளபதி திரு உடையப்பன், திரு செயலாபதி மற்றும்
இந்நிகழ்ச்சியில் சான்றோர்கள், அறிஞர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.














