• Home
  • தமிழ்நாடு
  • 76 ஆவது குடியரசு தினத்தை நமது திருவானைக்காவல் மேலக்கொண்டயம் பேட்டை பகுதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில்!
தமிழ்நாடு

76 ஆவது குடியரசு தினத்தை நமது திருவானைக்காவல் மேலக்கொண்டயம் பேட்டை பகுதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில்!

Email :143

இன்று 26.1.25 நமது இந்திய திருநாட்டின் 76 வது குடியரசு தினத்தை நமது திருவானைக்காவல் மேலக்கொண்டயம்பேட்டை பகுதி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் நேருஜி நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தேசிய கொடியை பறக்க விட்டு இனிப்புகள் வழங்கி போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கொண்டாடினோம்.

நிகழ்ச்சியில் என்னுடன் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 5வது வார்டு உறுப்பினர் திரு.அப்பீஸ் முத்துகுமார், 7 வது வார்டு உறுப்பினர் திருமதி.ராதா, ஓய்வுபெற்ற கல்லூரிமுதல்வர்.திரு.சுப்ரமணியன்,முன்னாள் அறங்காவலர் திரு.சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்ற விழாவில் பெரியவர்.திரு.பிச்சைமணி அவர்கள் தேசியக் கொடியை பறக்க விட்டு சிறப்புரையாற்றினார். இரண்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்றனர்.

இவ்விழாவில் மேலும் ஒரு சிறப்பாக நமது திருவானைக்காவல் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில்  7ம் வகுப்பு படிக்கும் மாணவி செல்வி.சஹானா ஸ்ரீ நீண்ட நேரம் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை புரிந்ததையும் அவருக்கு வழங்கப்பட்ட மெடல் கேடயம் மற்றும் சான்றிதழை அனைவரிடமும் காண்பித்து வாழ்த்து பெற்றார். அவர் மென்மேலும் பல சாதனைகளை புரிந்திட வாழ்த்துகள்.

வி.வே.விஸ்வேஸ்வரன்
திருவானைக்காவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts