தமிழ்நாடு

சங்கச் சொல் அரங்கம் – 91

Email :104

சங்கச் சொல் அரங்கம் – 91
______________________
(பாலைகலி:19 )

களம்:  

பொருள் தேடல்
பொருட்டுப் பிரியக் கருதினான் தலைவன். தன்னையும் கூட அழைத்துச் செல்லுமாறு வேண்டுகிறாள் தலைவி.
செல்வழி கடுமையும், தலைவியின் மென்மையும் கூறி மறுக்கின்றான்.
அது கேட்டத்தலைவி நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி அவனுடன் பயணம் போய் விட அடம்பிடித்தாள்  )

கவி உரை:


அது ஒரு பாலைநிலம்.

கல்லும் முள்ளும்
கொட்டிக்கிடக்கும் கொடியவனம்

அதன் வழி அவனோ புறப்பட்டான்.
பொருள் சேர்த்திட அவனும் தலைப்பட்டான்

தலைவி அன்றோ தனிப்பட்டாள்?

பயணம் போய் விட அவனை
யார் விட்டார்?
தலைவி இடைவே வந்து குறுக்கிட்டாள்.
போகக்கூடாதெனவே தறுக்கிட்டாள்.

இருவரும் என்ன ப் பேசினரோ
கொஞ்சம் தள்ளி நின்றே நாம் கேட்போம்.

சூரிய வெங்கதிர் அனல் பரப்பும். அதனால்
வரண்டு போகுமே வயல் வரப்பும்.
கோடைக்க ஞ்சிய
யானைகள் கூட்டம்.
குளிரைத்தேடி
மலைமுகடு ஓட்டம்.

மலையும் வெடிக்கும் சிறுதுகளாட்டம்.

அய்யோ! அந்த வெம்மை யதில் –
வரண்ட ஆற்றிலும் அனல்   படியும்.
அதுதான் அன்னவன் போகிற வழியும்.

தலைவி:

“பொருளைத் தேடுதல் நல்லது தான். நம் வாழ்வில் என்றும் உள்ளது தான்.
தனித்து நீயும் செல்வது வோ?
அன்பே நீ என்
உயிர் அல்லவோ?
என்னையும் உன்னுடன் அழைத்து செல்.
பயணம் போவதில் என்னையும் இணைத்துக் கொள். “

தலைவன்

“கிளிமொழி பேசும் இனியவளே! – என் உள்ளம் இனிக்கும் கனியவளே. – நீ
வெம்மைக்காட்டிடை வருவதெனில்
பட்டினும் மெல்லிய உன் பாதம்
சுட்டுப் பொங்கிடும் நிலையாகும்.
என் உள்ளம் என்றோ ரணமாகும். ?”

தலைவி:

“அன்பே!
நான் சொல்வதை நீயும் கேட்டுக் கொள்.
நீ விடுகிற மூச்சைப் பார்த்ததுண்டோ?
மூச்சின் போக்கோ புரியவிலை.. அது
எவ்வளவு காலமோ தெரியவிலை.
நிலையே இல்லாக் காற்றைப் போல் நாம்
வாழும் நாளும் சொற்பம் தான்.
உன்னொடு வாழும் நாள் என்
சொர்க்கம்தான். “

தலைவன்:

“வாய் வழி அமுதம் தருபவளே! அழகே! அன்பே! குலமகளே! நீ
வெம்மைக்காட்டிடை வருவதெனில்
குடிக்க நீரும் இன்றித் தீர்ந்திடுமே. உன் நாவும் வரண்டு ப் போய் விடுமே..?”

தலைவி:

அதனால் எனக்குக்கு கவலை இலை.
மனம் தளர்ந்திட நானும் போவதிலை. ஆற்று நீரின் ஓட்டம் போல் இளமையும் அன்றோ விரைந்து கெடும். துய்த்திடும் முன்னே அழிந்துவிடும். “

தலைவன் :

“மூங்கிலும் கூடத் தோற்றுவிடும். உன் மென்தோள் அத்துணை அழகு பெறும்.
வெம்மைக் காட்டிடை வருவதெனில் –
நிற்கவும் ஆங்கே நிழல் இலையே!
கருதிடும் உந்தன் எழில் வடிவே!”

தலைவி:

“நிழலைப் பிரிந்த கொடி போலே
மேனியும் வெளு த்து பசலை வரும்.
உன் தாளடி நிழலைப்பிரிவதெனில்
என் நிலையும் அது போல் ஆகிவிடும்.
உன் நிழலை விட்டு நான் புரியேன்.
பிரிந்தால் நானும் உயிர் தரியேன்.

நான் என்ன வேண்டினும், நீ மறுத்தால் நான்
உயிருடன் இருப்பேன் என்றா நீ நினைத்தாய். ?
நான் சொல்வதை நீயும் கேட்டுக்கொள்.

வருவேன் உன் உடன் கூட்டிச் செல்.

அம்பும் நுழைந்திட இடமின்றி குன்றுகள் சூழ்ந்தக் கொடிய வழி. நீர்நிலை வற்றிப்போம் அளவு வெம்மை க் காற்று வீசும் வழி!
அன்பே நீயும் செல்லும் வழி!

ஆயினும் ஆயினும் ஒருக் காட்சி
நீ காணவில்லை தான் போலும்.

கண்டால் உன் எண்ணம் மாறவும் கூடும்.

ஆங்கே —-

கலைமான் இருக்கும் இடம் தேடி,
பெண்மான் குதித்து ஓடும்.

அன்புதன் துணையைத் தானே தேடும். ?

கொடியது சூழல் ஆனாலும்
ஒன்றை விட்டா
ஒன்றுப் பிரிந்துவிடும் ?

பிரிந்தால் அவைகள் இறந்துபடும்.

அதனால் அன்பே ………..
மான்களின் காட்சியைப் புரிந்துக் கொள்.
என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்.
இல் எனில்
உயிர் எனும் சுடரை அணைத்துச்செல்
_____________________
காமு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts