தமிழ்நாடு

உங்கள் வீட்டில் குழந்தைகள் படிக்கிறார்களா?

Email :196

சுய கற்றல் முறை (SELF LEARNING METHOD)
தேதி: 27.12.2024

உங்கள் வீட்டில் குழந்தைகள் படிக்கிறார்களா?

அன்புடையீர் பெற்றோர்களே,

படிப்பது என்பது தொடர்ச்சியாக நடைபெறும் செயலாக இருக்க வேண்டும். இது விடுமுறை நாட்களிலும் நிறுத்தாமல் தொடர வேண்டும். தற்போது  அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விடுமுறை நாட்களிலும் தங்களின் கல்வி செயலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும், பெற்றோர்கள் மற்றும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளின் சுய கற்றல் முறைக்கு உறுதுணையாக உள்ளனர்.

சுய கற்றலுக்கு உதவும் செயல்பாடுகள்:

பல பெற்றோர்கள் தொங்கும் கரும்பலகை வாங்கி கொடுத்து, குழந்தைகளை எழுதி பழக உதவுகிறார்கள்.

குழந்தைகள் ஓவியங்கள் வரைந்து, தங்களின் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்கிறார்கள்.

பாடல்கள் பாடி, கதைகள் சொல்லி, தங்களின் மொழி திறனையும் கற்பனை திறனையும் மேம்படுத்துகிறார்கள்.

செய்தித்தாள்களை வாசித்து, நாட்டில் நடப்பதை அறிந்து கொள்கிறார்கள்.

புத்தகங்களை படித்து, அறிவையும் நற்பண்புகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள்.

பறவைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு அளித்து, கருணை மற்றும் பொறுப்புணர்வு திறன்களை மேம்படுத்துகிறார்கள்.

உண்டியலில் சேமிப்பு பழக்கத்தை வளர்த்து, நிதி ஒழுங்கை கற்றுக்கொள்கிறார்கள்.

செடிக்கு நீர் ஊற்றி, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக்கொள்கிறார்கள்.

வீட்டை தூய்மையாக பராமரித்து, பொறுப்புணர்வையும் சுகாதாரத்தின் அவசியத்தையும் கற்றுக்கொள்கிறார்கள்.

விளையாடி, உடல் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துகிறார்கள்.

கால அட்டவணை போட்டு படிக்கிறார்கள், இதனால் நேர மேலாண்மை திறன் மேம்படுகிறது.

சுய கற்றலின் சிறப்பம்சங்கள்:

குழந்தைகள் சுயமாக சிந்தித்து, தங்களின் செயல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள்.

தொடர்ந்து கற்றுக் கொள்வதன் மூலம், பழைய பாடங்களை மறக்காமல், புதிய பாடங்களை கற்றுக்கொள்கிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டில் படிக்கிறார்களா என்று கவனித்தால் போதுமானது.

குழு கற்றலுக்கு ஊக்கமளித்தல்:

குழந்தைகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ படிக்க தொடங்கி விட்டார்கள்.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அழைத்துச் சென்று சுற்றுப்புறத்தை கவனிக்க வைக்கிறார்கள்.

பிறகு அவர்கள் பார்த்தவற்றை கட்டுரையாக எழுத சொல்லுகிறார்கள். இதன் மூலம் குழந்தைகளின் பகுத்தறிவுத்திறன் மற்றும் எழுதுதல் திறன் மேம்படுகிறது.

இந்த செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம், குழந்தைகள் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்களாகவும், தன்னம்பிக்கை மற்றும் தன்னாட்சி கொண்டவர்களாகவும் வளருகிறார்கள்.

நன்றி.
எஸ். சிவகுமார்,
முன்னாள் முதல்வர், DIET, காஞ்சிபுரம்.
தொடர்பு: 6383690730

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts