
இன்று 01.02.2025 திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஒன்றியம் இருங்களுர் ஊராட்சியில் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக 50 மரக்கன்று நடும் விழாவானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாக திரு ராபின்சன் திவாகரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

அதை நீ தொடர்ந்து முன்னாள் தலைவர் திரு வின்சென்ட் அவர்கள் இதுபோன்ற சமூக முன்னேற்றத்திற்கும் இயற்கை ஆர்வத்திற்கும் அர்ப்பணிப்போடு பணியாற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் அவர்களுக்கு நன்றி. இதனால் எங்கள் ஊராட்சியில் வர இருக்கும் ஊராட்சி சந்தைக்கு இந்த மரக்கன்றுகள் சிறப்பான விதத்தில் பயன் தரும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த இயற்கை சூழலை அமைத்து தர முடிவு செய்த சில்ட்ரன் டிரஸ்ட் க்கும் மற்றும் இதனை ஒருங்கிணைப்பு செய்த திரு ராபின்சன் அவர்களுக்கும் எங்கள் ஊராட்சி மன்றம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற பணிகளை தொடர்ந்து செய்ய வாழ்த்துகிறேன்.
இறுதிக் கட்டமாக நன்றி உரை திருமார்ட்டின் ஊராட்சி மன்ற செயலாளர் இந்த நிகழ்ச்சியை சிறந்த முறையில் எங்கள் ஊராட்சிக்கு வழங்கிய சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும்மற்றும் எங்கள் முன்னாள் தலைவர் திரு வின்சென்ட் ஐயா அவர்களுக்கும் மற்றும் அனைத்து பொது மக்களுக்கும் ஊர் மக்களுக்கும் இந்நேரத்தில் நான் நன்றினை தெரிவித்துக் கொள்கிறேன்.
















