இலால்குடி வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா!
இலால்குடி வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவானது இலால்குடி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.பெ.ராணி அவர்கள் ஏற்பாட்டில், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.சௌந்திரபாண்டியன், தலைமையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பில் சிறப்பு விருந்தினர்களாக இலால்குடி கோட்டாட்சியர்

திரு.சிவசுப்ரமணியன், நகராட்சி ஆணையர் திரு.குமார், இலால்குடி வட்டார மருத்துவ அலுவலர்கள் திருமதி பிரின்சி, திரு.ஜெயமுரளி, நகராட்சித் தலைவர் திரு.துரை மாணிக்கம் , டிவிஸ் சமூக அறக்கட்டளை சார்பாக திரு.மணி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இலால்குடி பகுதியில் பணிபுரியும் அங்கன்வாடி அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
சிறப்பு செய்தியாளர்,
“இலால்குடி”
க.ரெங்கநாதன்
செல் : 7540018725.


















