திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் கிளப் சார்பாக கடந்த மூன்று ஆண்டுகளக ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவில் திருச்சி மாவட்ட அளவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 75 கல்வியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில் திருவனைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியின் சமூக பணித்துறை தலைவர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலருமான முனைவர் ஆ. அருண்பிரகாஷ் அவர்கள் 16 ஆண்டுகல தொடர் கல்வி பணி மற்றும் சமூக சேவையை பாராட்டி 21/09/2025 ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் கிளப் சார்பாக ஞானச்சுடர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டர். இவரை கல்லூரி நிர்வாகம், முதல்வர், பேராசிரிய பெருமக்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் மனதார பாராட்டினார்கள்.














