

கருஞ்சட்டைப் பதிப்பகம் நடத்திய தமிழ் மண்ணில் சேரன்மாதேவி குருகுலம் புத்தக அறிமுக விழா நேற்று 28.12.2024 மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்றது.
பேராசிரியர் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சிராப்பள்ளி, முனைவர் அ. செல்வராசு, வரவேற்பு உரையாற்றினார்.

பேராசிரியர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெரும்பாக்கம், சென்னை, முனைவர் இரா. மகிழேந்தி, தொகுப்புரை வழங்கினார். முதுநிலை ஆங்கில ஆசிரியர் தூய சவேரியார் மேனிலைப்பள்ளி, புறத்தாக்குடி, அறிமுக உரை வழங்கினார்.

வட்டாரக் கல்வி அலுவலர், மணிகண்டம், திருமதி இரா ஜெயலெட்சுமி, கருத்துரை வழங்கினார்.


தலைவர், சிறப்பு நிலைத் தமிழ்த்துறை, ஜவகர்லால் நேரு, பல்கலைக்கழகம், புதுடெல்லி முனைவர் இரா. அறவேந்தன் தலைமை உரை ஆற்றினார்.
தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, பேராசிரியர் சுப வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார். பட்டதாரித் தமிழாசிரியர், புனித சவேரியார் மேனிலைப்பள்ளி, புறத்தாக்குடி, முனைவர் அ. புவியரசு நன்றி உரை வழங்கினார்.



















