காஜாமலை மகளிர் மன்றம் டிரஸ்ட் குடி போதை மறுவாழ்வு மையத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு நிகழ்வு இன்று 30.12.2025 காலை கொண்டாடப்பட்டது.


இதில் சமூக பணித்துறை மாணவ, மாணவிகள் மற்றும் காஜாமலை மகளிர் மன்றத்தில் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் சிகிச்சை பெறும் நோயாளிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியை குட் சம்மரிட்டன் சபையின் எபி அவர்களும் அவர்களின் குழுவும் நல்லிணக்க பாடல்களை
பாடியும் நல்ல கருத்துக்களை கூறியும் கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


குடி போதை மறுவாழ்வு மையத்தின் திட்ட இயக்குனர் திரு. பாரதி மோகன் அவர்கள் சிறப்புரையாற்றி சிறப்பு பரிசை வழங்கினார்கள்.















