
இந்திரா கணேசன் பொறியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மெட்ராஸ் ஃபிளையிங் கிளப் சார்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதை பழக்கம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இதில் துறை தலைவர் திருமதி ஹேமலதா முன்னிலை வகித்தார் மற்றும் மெட்ராஸ் ஃபிளையிங் கிளப் ஒருங்கிணைப்பாளர் திரு. கே.ப. மான்சிங் அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆத்மா மனநல மருத்துவமனையில் சமூக மனநல ஆலோசகர் திரு கரன் லூயிஸ் அவர்கள் சிறப்புரை வழங்கி மாணவரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.


இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.














