
கார்த்திகை மாதம் கடைசி திங்கட்கிழமை சோமவாரம்! கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமாவாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி துவாக்குடி அருகில் உள்ள திரு நெடுங்களநாதர் திருக்கோயில் கார்த்திகை கடைசி திங்கட்கிழமையும்

சோமவாரத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை கலச பூஜைகள் 108 சங்கு பூஜைகள் திரு நெடுங்களநாதருக்கு 108 சங்காபிஷேகம் யாகபூஜைகள் 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் தொடங்கியது.

108 சங்கங்களில் நிரப்பப்பட்ட புனித நீரால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.














