• Home
  • தமிழ்நாடு
  • புதிய காலையில்
    துளிர்த்து எழுந்து வருக புத்தாண்டே!
தமிழ்நாடு

புதிய காலையில்
துளிர்த்து எழுந்து வருக புத்தாண்டே!

Email :164

மார்கழிப் பூக்களில் முன்பனிக்கால வெயில் கோலமிடும் இனிய பொழுது
புது ஒளி
நிலமெங்கும் புதிய விளைச்சல் புதிய பாய்ச்சல்
புது வெள்ளம்
மக்கள் நெஞ்சங்களில் மகிழ்ச்சி மகரந்தம் கூடும் புதிய காலையில்
துளிர்த்து எழுந்து வருக புத்தாண்டே
உலகில் பேரிடரும் பெரும் போரும் அகன்று உயிர்களிடத்தில்
பேரின்பமும் பெரு வளமும் நிறைந்திட வருக புத்தாண்டே
அறமும் அறிவும்
அருளும் வேர்விடும் திணைகளில் வேறுபாடுகள் வெறுப்புகள் பாகுபாடுகள் களைந்து வாசல் தோறும் முப்பால் பொங்கிட முத்துச்சுடராய் ஒளிவீசி
கனவு மெய்ப்பட கரங்கள் கோர்த்து
நல்வாழ்வு எய்திட
பல்லுயிர்ச் சூழல் செழித்து
வையம் உய்ய
வருக புத்தாண்டே
வருக மலர்க அருள்க.
சதீஷ் குமரன்.
கவிஞர், பேராசிரியர். கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி,
செயலர், தண்ணீர் அமைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts