“பனை மரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்”.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்
பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்
பனை மரங்களை வெட்ட அனுமதி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியான செய்தி தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வரவேற்பதுடன்,
மற்ற மரங்களையும் வெட்டு முன் அந்த பகுதி உள்ள தாசில்தாரிடம் அனுமதி கடிதம் பெற்று தான் பொது மக்கள் மரங்களை வெட்ட வேண்டும் என அறிக்கையுடன் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
கே.சி.நீலமேகம்,
மாநில பொருளாளர், மக்கள் சக்தி இயக்கம். செயல்தலைவர்,
தண்ணீர் அமைப்பு.














