வடசென்னை பெரம்பூர் பள்ளிக்கூட சாலையில் ஸ்ரீ சீனிவாசா சிலம்பாட்ட குழு மற்றும் அகத்தியர் சிலம்ப கலைக்கூடம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா 17/01/2025 அன்று மற்றும் கோவாவில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சிலம்பப் பிரிவில் அதிக தங்கம் என்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு மூத்தா ஆசான் சீனிவாசன் பயிற்றுநர்கள் கார்த்திக் உமாபதி தலைமையில் பாராட்டு விழா மற்றும் சான்று வழங்கும் விழா இனிதே நடைபெற்றது. இதில் அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக ஒய் ஜி எப் ஐ நேஷனல் பிரசிடெண்ட் அண்ணன் தன்ராஜ் அவர்கள் உதவிடும் மனிதா அறக்கட்டளையின் பிரசிடெண்ட் மணி பொருளாளர் முரளி மற்றும் யூத் கேம்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் நிறுவனர் கே குமாரசாமி, தியாகதீபம் அன்னை தெரசா விழிப்புணர்வு சங்கம் நிறுவனர் அய்யா மணி கலாமின் கரங்கள் அறக்கட்டையின் நிறுவனர் கிங் டேவிட் ஆகியோர் கலந்து கொண்டே மாணவ, மாணவிகளுக்கு சான்றுகளையும் பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தனர்.














